நண்பன் ஒருவன் வந்த பிறகு- விமர்சனம்

ஒரு 90ஸ் நாஸ்டாலஜி Feel கொடுக்க முயன்றுள்ளது நண்பன் ஒருவன் வந்த பிறகு படம்

ஹீரோ & படத்தின் இயக்குநர் ஆன ஆனந்த் வெங்கட்பிரபுவிடம் தனது வாழ்வைச் சொல்கிறார். அந்த வாழ்வில் என்னென்ன விருப்பங்கள் இருந்தன. திருப்பங்கள் நடந்தன என்பதை ஒரு நினைவுப்பாதை போட்டுச் சொல்கிறது படத்தின் திரைக்கதை

நடிகராக ஆனந்த் ஒரு சில காட்சிகளில் பாஸ்மார்க் வாங்குகிறார். முதல் படத்திலே ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர்கள் ஒரு ஸ்ட்ராங்கான ரைட்டிங் உள்ள கதையில் வரவேண்டும். அப்போது தான் அந்தக் கேரக்டர் ஓரளவேனும் மனதில் நிற்கும். ஹீரோ தவிர்த்து வினோத், ஆர்.ஜே விஜய் ஆகியோர் படத்தில் ஸ்கோர் செய்கிறார்கள். சம்பிரதாய ஹீரோயின் பவானி ஸ்ரீ சம்பிரதாயத்திற்கு வந்து செல்கிறார்

பின்னணி இசை ஓரளவு ஓகேவாக அமைந்துள்ளது. தனுஷ், ஜிவி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே பாடியிருப்பதால் பாடல்கள் சின்னதாக கவனிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவில் 90ஸ் தாக்கம் அதிகம். அதுவும் ஓகேவாகத்தான் உள்ளது

பழைய வாழ்வை நினைவுப்படுத்தும் நினைவுப்பெட்டக கதைகள் பைபிள் போல நிறைய்ய பக்கங்கள் தமிழ்சினிமாவில் எழுதப்பட்டு விட்டதால் சற்று புதிதாக யோசித்திருக்கலாம். திரைக்கதையில் ஆங்காங்கே சின்னச்சின்ன சுவாரஸ்யம் இருப்பது ஆறுதல். நண்பர்களில் சிலர் உற்சாகப்படுத்துவார்கள். சிலர் உபத்திரவப்படுத்துவார்கள். இந்த நண்பன் வந்த பிறகு நமக்கு இரண்டு உணர்வும் கலந்தே வருகின்றன
2.5/5
-மு.ஜெகன் கவிராஜ்

director Ananth RamNanban Oruvan Vantha Piragu movie