இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

எது தத்துவம்? என்ற புரிதலுக்குள் செல்ல வேண்டுமானால் ஏற்பு/ மறுப்பு என்ற இரு சாராரின் வாதத்தையும் நாம் வாசித்திருக்க வேண்டும். தேவி பிரசாத் சட்டபோத்யயா எழுதி கரிச்சான் குஞ்சு தமிழாக்கித் தந்துள்ள இந்தப் புத்தகம் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற தெளிவைத் தருகிறது

கருத்து முதல் வாதத்தை ஓங்கிப்பிடிக்கும் உபநிடத்துகள் அறிவியலை முற்றாக மறுக்கும் தன்மையுடையது. அது அறிவியல் ரீதியான தத்துவத்தை மறுக்கிறது. அறிவியல் தரும் பதட்டத்தை மதம் சார்ந்த தத்துவாதிகளை அவ்வப்போது வெளிப்படுத்தியே வருகிறார்கள். சாமி கண்ணக்குத்தும் என்ற கருத்துக்குள் வாழும் சிலரை நூல் விமர்சித்துள்ளது. புத்தமதம் ஏற்ற நாகர்ஜுனர் பரம சத்தியம் பூரணம் உண்டு என நம்புகிறார். அது மனிதர்களின் சிந்தனைக்கு உட்படாது என்றும், அது தானாக உணரப்படும் என்றும் சொல்கிறார். இதற்கான நிறைகுட விளக்கம் நூலில் உள்ளது. மனு சாஸ்திரத்தை மூலமாக கொண்டுள்ள கெளதமர், “சூத்திரன் வேதம் படிக்க வேண்டும் என்றால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்” என்கிறார்

ஒருவனை அண்டிப்பிழைக்க வைத்துவிட்டால் அவன் அதிலிருந்து எழக்கூடாது என்பதில் சில தத்துவவாதிகள் கவனமாக இருந்துள்ளனர். எவனது மூளை அடிமை தாண்டி செயல்படுகிறதோ, அவன் மூளையை தத்துவத்தால் அடிக்க வேண்டும் என்ற வெறி மதவாதத்திடம் உள்ளது. இந்த நூலை இப்போது தான் வாசித்துள்ளேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு மூன்று முறையும், தற்போது மூன்று முறையும் படித்திருக்க வேண்டும்..காலமின்மை சில நல்லவற்றை நழுவ விட வைக்கிறது

எது இருக்கு என நம் கண் எதிரே தெரிகிறதோ அல்லது மனக்கண்ணில் படுகிறதோ அதை நோக்கிப் பயணிப்பதே சாலச்சிறந்தது என்பேன். அதைத் தவிர்த்து இப்படிச் செய்தால் அப்படி வரும்..அப்படி அது வராவிட்டால் நீ செய்தது சரியில்லை என்று சப்பைக் கட்டு கட்டுவது தத்துவமே இல்லை. தத்துவம் என்பது உண்மைக்கு வழி சொல்ல வேண்டும் என்பதை நூல் உணர்த்தியது. பார்ப்போம் எதிர்காலத்தில் மீண்டும் பலமுறை இந்நூலை வேண்டும்

Deviprasad Chattopadhyayindia thaththuva iyalil nilaiththiruppanavum azhinthanavumKarichan kuinchuஇந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்